ஆரணி நெல் அரிசி வியாபாரிகள் எம். பிக்கு நன்றி தெரிவிப்பு

83பார்த்தது
ஆரணி நெல் அரிசி வியாபாரிகள் எம். பிக்கு நன்றி தெரிவிப்பு
குடும்பங்கள் பயன்படுத்தும் 25 கிலோ அரிசி பைகளுக்கு ஜி.எஸ்.டி ரத்து செய்ய கோரி ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து ஆரணி நெல் அரிசி வியாபார சங்கத்தினர் ஆரணி நகர மன்றத் தலைவர் ஏ.சி. மணி தலைமையில் எம்.பி. தரணி வேந்தனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதில் ஆரணி நெல் அரிசி வியாபார சங்கத் தலைவர் பாபு, செயலாளர் ஸ்ரீமான், பொருளாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி