திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் சக்தி நகரில் அமைந்துள்ள வேம்புலி அம்மன் கோவிலில் 15- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று இரவு பக்தர்கள் பறவை காவடி எடுத்து தங்களது நேற்று கடனை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.