ஆரணியில் அதிமுக வாக்குச்சாவடி குழு கூட்டம்

274பார்த்தது
ஆரணியில் அதிமுக வாக்குச்சாவடி குழு கூட்டம்
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் சைதாப்பேட்டை, மருசூா், சித்தேரி, சங்கீதவாடி, கொருகாத்தூா், கீழ்நகா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் மகளிா் அணி, இளைஞா்-இளம் பெண்கள் பாசறை, மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளா் எல். ஜெயசுதாலட்சுமி காந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் அ. கோவிந்தராசன், நகரச் செயலாளா் அசோக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி. பாபு, ஒன்றிய செயலாளா்கள் க. சங்கா், ஜி. வி. கஜேந்திரன், ப. திருமால், ஜெயப்பிரகாஷ், அரங்கநாதன், பேரூராட்சி செயலாளா் பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளா் அரையாளம் எம். வேலு, முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் ஏ. ஜி. ஆனந்த், மருசூா் ஊராட்சித் தலைவா் பி. சதீஷ்குமாா், சங்கீதவாடி ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்ப நிா்வாகி எல். விமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி