உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் போன்ற பகுதிகளில் தற்சமயம் மழை பெய்யாத காரணத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகின்றது. இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 11 கன அடியாக உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடியில் தற்போழுது 51.2 அடியாகவும், பாசனத்திற்கு நீர் வெளியேற்றம் 130 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி