உடுமலை: திருச்சி ஸ்டீல் ஏஜென்சிஸ் உரிமையாளர் மறுப்பு - புகார் அளிக்க முடிவு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழைய பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகத்தின் புதுப்பித்தல் பிரிவின் கட்டடத்தை திருச்சி ஸ்டீல் நிறுவனம் இடித்து பொருள்களை கடத்திச் சென்றதாக உடுமலை டிஎஸ்பி இடம் நேற்று CITU, LPF சங்கத்தினர் புகார் அளித்த நிலையில் இதற்கு திருச்சி ஸ்டீல் உரிமையாளர் கோபிநாத் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் எந்த சம்பந்தமும் இல்லாமல் திருச்சி ஸ்டீல் மீது புகார் அளித்த தொழிற்சங்கத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உடுமலை வியாபாரிகள் சங்கத்தின் மூலம் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி