திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர். இருப்பினும், வனப்பகுதியால் அவ்வப்போது மழை பெய்து வருவதால், கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.