உடுமலை வட்டம் பெதப்பம்பட்டிக்கு அருகில் உள்ள அடிவள்ளி கிராமத்தில் புதிதாக தார் சாலை போடப்பட்டது. தார் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்ட குறியீடு பலகைகள் அடங்கிய கம்பங்கள் நன்றாக நடப்படாததால் இப்போதே சாய்ந்து கிடக்கின்றன. அந்த அறிவிப்பு பலகைகள் திருட போகவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பணியை செய்தவர்கள் அதை கவனித்து சீர்படுத்துவார்களா?