திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ள 151 நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதன்படி குடிமங்கலம் ஒன்றியத்தில் வா. வேலூர், பொன்னேரி தரை பள்ளம் குளம், தொட்டம்பட்டி ஏ ஜி எம் குளம், பூளவாடி மாப்பிள்ளை நாயக்கர் குளம் உள்ளிட்ட 51 நீர்நிலைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது விருப்பம் உள்ள விவசாயிகள் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.