திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் சுமார் 300 ஆண்டுகள் பழமையான மரம் தற்பொழுது எந்தவித முன்னறிவிப்பின்றி வெட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டால் தொலைபேசி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தமிழகத்தில் மரம் வளர்ப்போம் மண்வளம் காப்போம் என பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வழியில் அரசு பள்ளியில் மரம் வெட்டப்பட்டு வருவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்