திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி அவர்களின் மகள் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் இந்த நிலையில் இன்று மைவாடியில் உள்ள அவரது பள்ளிக்கு உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினர்