திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை உடுமலை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த நிலையில் வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் தண்ணீரை தேடி வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வரத் துவங்கியுள்ளன. கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப உடுமலை வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி காரணமாக தற்பொழுது மூணாறு சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் உள்ளது ஒரு சில நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதால் அலட்சியம் காட்டாமல் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டுமென வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.