திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் சாலையில் இருவரையும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் மூணாறு மற்றும் திருமூர்த்தி அணை, அமராவதி அணை செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.