திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடந்தூர் மலை கிராமத்தில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவில் முன்புறம் 26 நபர்கள் பூஜை சாமான்கள் கடைகள் வைத்திருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வெள்ளத்தால் கடைகள் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் டிசம்பர் 32ஆம் தேதி மனு கொடுத்தும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் இன்று திருப்பூர் மாவட்ட வனப் பாதுகாவலரிடம் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் நிறுவனர் எலையமுத்தூர் தங்கராஜ் தலைமையில் நிவாரணம் வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.