திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வருவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜம்புகள் மலைத்தொடரில் விவசாயிகள் பெயரில் போலியாக பத்திரம் தயாரித்து தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மின்சாரம் மற்றும் அனைத்து வசதிகளையும் சட்டத்திற்கு புறம்பாக செய்துள்ளார்.
மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கோட்டாட்சியர் குமார் அவர்களிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மூன்று நாட்களில் விவசாயிகளின் விண்ணப்பம் ஏற்று கோட்டாட்சியர் முன்னிலையில் வழித்தடம் அகற்றப்படும் என கோட்டாட்சியர் கூறியதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.