உடுமலை அமராவதிநகர் ராணுவ பயிற்சி பள்ளியில் வீரர்கள் சாகசம்!

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இருந்து சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்தப் பள்ளியில் 63வது ஆண்டு விழா மற்றும் பாசிக் அவுட் எனப்படும் என இறுதி அணிவகுப்பு விழா இன்று மேஜர் ஸ்ரீ ராம்குமார் ட்ரில் சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த நிலையில் மாணவர்கள் இறுதி அணிவகுப்பு 8: 30மணிக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக 9மணிக்கு மேல் பொள்ளாச்சி எம்பி வந்ததால் அரை மணி நேரம் மைதானத்தில் மாணவர்கள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருந்தது இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பின்னர் ராணுவ பயிற்சி பள்ளியில் 63 வது ஆண்டு விழா , 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பாசிக் அவுட் எனப்படும் இறுதி அணிவகுப்பை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி ஏற்றுகொண்டார். பின்னர் பள்ளியை விட்டு வெளியேறும் இறுதியாண்டு மாணவர்களின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதை கண்டு களித்தபின் நினைவு பரிசு கோப்பை வழங்கு பாராட்டு தெரிவித்தார் நிகழ்வில் அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி முதல்வர் மணிகண்டன் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி