திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்ஜிஎம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு மக்கள் சேவை துறை அலுவலகங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடுமலை காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம் ஆகியவற்றுக்கு சென்று தகவல்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். துறைசார்ந்த செயல்பாடுகளையும் மாணவர்கள் கேட்டு அறிந்தனர்.