திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் தென்னை மரத்து வீதியில் உள்ள சங்க அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கே.எஸ். மணி தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ் வரவேற்றார். கோட்டத்தில் மே மாதம் கடைசி வாரத்தில் சங்கத்தின் ஆண்டு விழா நடத்துவது, மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவுத்தொகை முழுவதும் வழங்க வலியுறுத்துதல், புதியதாக பழனி மாவட்டம் குறிக்கும் போது உடுமலை வளர்த்தாலும் பகுதியை இணைக்க வேண்டாம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.