தீயணைப்பு நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை!

360பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு நிலையம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் இருக்கும் நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி