உடுமலையில் குளம் அழகுபடுத்தும் பணி இழுபறி

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ரோடு வெஞ்சமடை பகுதியில் பிஏபி கால்வாய் அருகே குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் கழிவு நீர் தேங்கியும் புதர் மண்டியும் காணப்பட்டது. இந்த நிலையில் நகராட்சி சார்பில் 35 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி