திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகர் பகுதியில் வேப்பமரம் ஒன்றில் பால் வருகிறது என தகவல் இப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியது இந்த நிலையில் சம்பவ இடத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் வேப்பமரம் அருகில் திரண்டு பால் வரும் காட்சியை புகைப்படம் எடுத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது இன்று வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி மற்றும் அம்மனுக்கு உகந்த நாளில் தற்பொழுது வேப்ப மரத்தில் பால் வந்து கொண்டுள்ளது. வேப்ப மரத்தில் பால் வருவது தெய்வீகமாக அருவியில் காரணமாக பால் வருகிறதா என தெரியவில்லை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். என தெரிவித்தனர்