திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் எலுமிச்சை கிலோ 80 முதல் 90 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 115 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. இதுபோல பல்வேறு காய்கறிகள் விளைச்சல் சற்று உயர்ந்து உழவர் சந்தையில் காணப்பட்டது.