திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், சோளம், உளுந்து, கொண்ட கடலைசாகுபடி பிரதானமாக உள்ளது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் முன்னேற்று பாசன திட்டம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரம் நேரடி ஆய்வு செய்தார். அப்போது வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, வேளாண் அலுவலர் சுனில் கவுசிக், உதவி வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.