உடுமலை நகராட்சி ஆணையாளராக ஜே விநாயகம் பதவியேற்பு

71பார்த்தது
உடுமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த எம். சரவணக்குமார் பூந்தமல்லி நகராட்சி ஆணையாளராக
பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஆவடி மாநகராட்சி உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த ஜே. விநாயகம் உடுமலை கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு கூடுதலாக பழனி நகராட்சியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜே. விநாயகம் உடுமலை நகராட்சி ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உடுமலை நகர மன்ற தலைவர் மு. மத்தீன், துணைத் தலைவர் எஸ். கலைராஜன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி