நகராட்சி சந்தை சுங்க கட்டணம் அதிகாரிகள் வசூல் செய்யும் பணி தீவிரம்

1201பார்த்தது
உடுமலை நகராட்சி சந்தையில், நகராட்சி அத காரிகள் நேரடியாக சுங்கம் வசூல் செய்து வரு கின்றனர்.

உடுமலை நகராட்சி சந்தைக்கு, சுற்றுப்புற கிரா மங்களில் விளையும் தக்காளி, கத்தரி, மிளகாய், சின்ன வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி களை விவசாயிகள் கொண்டு வந்து, ஏல முறை யில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், தினசரி காய்கறி சந்தையும், அதே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சந்தை குத் தகை வசூல் செய்ய, ஏலம் எடுத்தவர், சந்தை பரப் பளவு பாதியாக குறைந்துள்ளதால், ஏலத்தொ கையை குறைக்க வேண்டும் என கூறி, ஆண்டு சந்தை குத்தகை தொகை செலுத்தவில்லை. கடந்த மார்ச் மாதம், குத்தகை காலம் முடிந்த நிலையில், ஒரு கோடியே, 10 லட்சத்து, 52 ஆயி ரம் ரூபாய் செலுத்தி, கால நீடிப்பு செய்ய நகராட்சி அறிவுறுத்தியதோடு, நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால், ஒரு மாதமாகியும் குத்தகை தொகையை செலுத்தாததால், முதல், நகராட்சி அதிகாரிகள் நேரடியாக சுங்கம் வசூல் பணியை துவக்கினர்.
நுழைவு வாயிலில், வருவாய்பிரிவு அலுவ லர்கள், ஊழியர்களை கொண்டு, வசூல் செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி