உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமரா வதிவனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர். பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ் சிவயல், மாவடப்பு, குலிப் பட்டி, குருமலை, காட்டுப் பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இவர்கள் விவசாயத்தை இயற்கை முறையில் காலங்காலமாக செய்து வருகின்றனர். அத்துடன் வனப்பகுதி யில் சீசனுக்கு தகுந்தவாறு இயற்கை முறையில் விளையும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதில் மலை வாழ் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இஞ்சி, பீன்ஸ், சிறுதானியங்கள், மஞ்சள், பூண்டு, மிளகு. ஏலக்காய், நெல், வாழை
உள்ளிட்டவை இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது. வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சாகுபடி பணிகளுக்கு அங்கு உற்பத்தியாகின்ற ஆறுகள் நீராதாரமாக உள்ளது. ஆறுகளில் இருந்து குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு சென்று தெளிப்பு நீர் பாசனத்தின் மூலமாகவும் நேரடியாகவும் மலைவாழ் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆனால் கோடை காலத் தில் வெப்பத்தின் தாக்குதலால் ஆறுகள் முற்றிலுமாக நீர்வரத்தை இழந்து வறண்டுவிடுகிறது. இதனால் மலை வாழ்மக்கள் கோடை காலத்தில் சாகுபடி பணிகளை மேற் கொள்ள முடியாத நிலை உள்ளது. அதைத்தொடர்ந்து கால்நடை வளர்ப்பு. தேன் எடுத்தல், வனப்பகுதியில் விளைகின்ற பொருட்களை சேகரித்து விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றின் மூலம் ஓரளவுக்கு வருமானத்தை ஈட்டி வாழ்வாதாரத்தைகாப் பாற்றிக் கொள்கின்றனர். மேலும் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான நாட்கள் நெருங்கி வருவதால் நிலத்தை பண்படுத்தும்
நடவடிக்கையும் தொடங்கி உள்ளது. இதனால் பருவமழை தொடங்கியதும் சாகுபடி பணிகளை விரைவில் மேற் கொள்ள இயலும். அதுமட்டு மின்றி தண்ணீர் உள்ள போது சாகுபடி செய்து ஓரளவிற்கு வருமானத்தையும் பெற முடியும். இதனால் மலைவாழ்
விவசாயிகள் நிலத்தை பண்படுத்தும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.