உடுமலை ரோட்டரி கேலக்ஸி சங்கத்திற்கு சென்னையைச் சேர்ந்த சென்னை மிஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் நடமாடும் மருத்துவ ஊர்தியை அன்பளிப்பாக வழங்கியது. துவக்க விழா அமராவதி நகர் திப்பிபாறையில் உள்ள முதியோர் இல்லமான கேர் வாழ்வகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
உடுமலை ரோட்டரி கேலக்ஸி சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் வெற்றிவேல் குமார் வரவேற்று பேசினார். விழாவிற்கு உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் மற்றும் சென்னை மிஷன் ஹரி நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ரோட்டரி கேலக்ஸி மருத்துவ மையத்தின் தலைவர் ரோட்டேரியன் டாக்டர் அண்ணாமலை, ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் 2025-26 ரோட்டேரியன் மைக்கேல், உடுமலை சி. எஸ். ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தின் சேகரத் தலைவர் டேனியல் ராஜ், மற்றும் கேர் வாழ்வகத்தின் உரிமையாளர் தோமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக 2025-26 ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் ஆறுமுகம் பல்லடம் ரெயின்போ சங்கம் மற்றும் உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேய பிரபு மற்றும் ரோட்டரி கேலக்ஸி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் ரோட்டரியன் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் 79 00 88 00 78 என்ற எண்ணில் இந்த மருத்துவ மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளது