திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பழனி திண்டுக்கல் மதுரை தூத்துக்குடி திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பாலக்காடு அருகே ரயில் மின் பாதையில் தடங்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வருகின்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்கின்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக உடுமலை வந்தது இதனால் அவசர தேவைக்கு செல்லும் பயணிகள் கடும் ஆவதி அடைந்தனர்.