உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை
சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 8 விவசாயிகள் 64 மூட்டை அளவுள்ள 3 ஆயிரத்து 200 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
அதன்படி முதல் தர கொப்பரை 167 முதல் 176. 19 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ. 136. 69 முதல் ரூ. 163 வரையில் ஏலம் போனது. இந்த தொகையானது விவசாயிகள்வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.