திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் குடிசை வீடுகளில் வாழும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞரின் கனவு திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது ஒன்றிய ஆணையாளர் நாகலிங்கம் தலைமை தாங்கினார் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராஜன் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கம் பயனாளிகள் தேர்வு குறித்து பேசினார் குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் கணேஷ் குடும்பங்களின் ஒன்றியத்துக்குட்பட்ட 23 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்