திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் முக்கிய ரோடுகளில் மீண்டும் தாறுமாறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக ராமசாமி நகர் ரயில்வே கேட் மற்றும் பஸ் ஸ்டாண்ட், காந்தி நகர், அண்ணா குடியிருப்பு பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.