உடுமலை உழவர் சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டதை யடுத்து, இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. உழவர்சந்தைகளில் காய், கனி வரத்தை அதிகரிக்க தோட்டக்கலைத் துறையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பைக் குறைக்கவும். விவசாயி களை பெரும் சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும்
நுகர்வோர்களுடன் ஒருங் கிணைக்கவும், காய்கறிகள், பழங் கள் மற்றும் பிற அழகும்பொருட்களுக்கான வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், 187 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள் சீரிய முறையில் பயன்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசு அதனடிப்படையில், உடுமலை உட்பட திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில், காய்கறி வரத்தை அதிகரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.