உடுமலையில் தொழிற்சங்க பேரணி 1000 பேர் பங்கேற்பு!

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பேரணி திருப்பூர் மாவட்ட மாநாடு தேஜஸ் திருமண மஹாலில் நடைபெற்றது முன்னதாக உடுமலை ரயில் நிலையம் முன்புறம் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொண்ட தொழிற்சங்க பேரணியை மாவட்ட தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார். பேரணியானது புதிய பஸ் நிலையம் கல்பனா ரோடு கச்சேரி வீதி தளி ரோடு வழியாக தேஜஸ் திருமண மஹாலில் நிறைவு பெற்றது பின்னர் நலவாரியத்தில் பதிவு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிவாரணத் தொகைகளை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாஸ்கரன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் அப்பாஸ், தொழிற்சங்க பொருளாளர் வைதேகி உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ ரவி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் திரளாக கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி