பெண்கள் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் கூடுதல் சார்பு நீதிபதி அறிவுரை

256பார்த்தது
பெண்கள் துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் கூடுதல் சார்பு நீதிபதி அறிவுரை
பெண்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து இருப்பது அவசியம் என்று கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி கூறினார். அடிப்படை சட்டங்கள்
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவின் பேரில் பெண் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சேவ் தன்னார்வ அமைப்பு சார்பில் சாமுண்டிபு ரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சேவ் தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், கூடுதல் சார்பு நீதிப தியுமான மேகலா மைதிலி தலைமை தாங்கி பேசியதா வது: -
பெண்கள் இந்த காலகட்டத்தில் அனைத்து துறைகளி லும் ஆண்களுக்கு நிகராக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பணிபுரியும் இடங்களில் உங் களை அச்சுறுத்தும் விதமாக பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை துணிவோடு எதிர்கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற் படும் பாதிப்புகளை தயக்கமின்றி தைரியமாக வெளி யில் சொன்னால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற் றங்களை தடுக்க முடியும்.
பெண்கள் வெளியில் கடன் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு மட்டுமில்லாமல் குடும் பத்தின் நலனுக்காக பெண்கள் கண்டிப்பாக அடிப்படை சட்டங்களை தெரிந்து இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார். சட்ட உதவி மையம்திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் உதயசூரியன், நாகராஜன், ஸ்ரீராதா ஆகியோர் பெண் தொழிலாளர்க ளுக்கான சட்டங்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், நீதிமன்ற சட்ட உதவி மையம் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.
முடிவில் சேவ் அமைப்பின் தன்னார்வலர் பாத்திமா மேரி நன்றி கூறினார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி