திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் 2 மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை புவனேஸ்வரி கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.