திருப்பூர்: தனியார் தொழிற்சாலை அமைப்பதை நிறுத்த கோரிக்கை

66பார்த்தது
திருப்பூர்: தனியார் தொழிற்சாலை அமைப்பதை நிறுத்த கோரிக்கை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு காலை பொங்கலூர் வே.வாவிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: - பொங்கலூர் ஒன்றியம் வே.வாவிபாளையம் ஊராட்சியில் விவசாய பூமியில் தனியார் நிறுவனம் சார்பில் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். இது தென்னை விவசாயம் அதிக அளவில் செய்யப்படும் பகுதியாகும்.

  பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பிரதான கால்வாய் இந்த பகுதியில் முக்கிய நீராதாரமாக உள்ளது. விவசாய பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம ஊராட்சி மன்றம், பொதுமக்கள் கருத்து மற்றும் ஆட்சேபனையை கேட்டு அதன் அடிப்படையில் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தொழிற்சாலை கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி