டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்ற லாரி
போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் செல் லும் சாலையில் நேற்று காலை தெற்கு போலீஸ் நிலையம் அருகே லாரி ஒன்று, டீசல் இல்லாமல் பாதி வழியில் நின் றது. இந்த சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்கப்பட் டுள்ளது. குறுகிய சாலையாக இருப்பதால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் சென்று வந்தது. இந்தநிலையில் லாரி பழுதடைந்து ரோட்டில் நின்றதால் தாராபுரம் ரோட்டில் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித் தது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் ஓடிச்சென்று அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் வாங்கி வந்து பின்னர் லாரியை ஓட்டிச்சென்றார். இதன்காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது