திருப்பூரில் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி மோசடி

82பார்த்தது
திருப்பூரில் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி மோசடி
திருப்பூர் கோவில்வழி பகுதியை சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள கோவில் பூசாரி உள்பட 3 பேர் திருமணம் செய்து வைப்பதாக ஆசைவார்த்தை கூறி உள்ளனர். தொடர்ந்து வீட்டை விற்று தோட்டத்துடன் வீடு வாங்கி தருவதாகவும் கூறினர். 

இதையடுத்து அவர், வீட்டை விற்று ரூ. 15 லட்சத்தை தோட்டத்துடன் வீடு வாங்க அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது அவர்கள் நாடகமாடி ரூ. 15 லட்சத்தை பறித்தது தெரியவந்தது. பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ. 15 லட்சத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தொழிலாளி புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி