ஆப்பநாடு மறவர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் மாநில பொதுச்செயலாளர் வி. டி. பாண்டியன் திருப்பூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் தலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செந்தில் மல்லர் என்பவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக, தரக்குறைவாக பேசி உள்ளார் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள ஆப்பநாடு மறவர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னணி கழகம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.