முத்தமிழறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற தலைப்பில் ஒருகோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தி. மு. க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பல்லடம் தொகுதி இடுவாய் ஊராட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம். எல். ஏ. வுமான க. செல்வராஜ் ஆய்வு மேற்கொண் டார்.
அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் தி. மு. க. வில் இணைவதற்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை க. செல்வராஜ் எம். எல். ஏ. விடம் வழங்கினார்கள். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வலிங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர்
பிரபு, அவைத்தலைவர் அப்துல்பாரி, பொரு ளாளர் சர்புதீன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தாகா நசீர், முன்னாள் கவுன்சிலர் சிவபாலன் உள்ளிட் டவர்கள் கலந்து கொண்டனர்.