ரயில் மோதி வாலிபர் பலி

63பார்த்தது
ரயில் மோதி வாலிபர் பலி
திருப்பூர் காலேஜ் ரோடு, சலவைப்பட்டறை பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகில் அழுகிய நிலையம் வாலிபர் உடல் கிடப்ப தாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தக வல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம் பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள். அப்போது அங்கு இறந்து கிடந்தவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகேசன் (வயது 24) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் திருப்பூர் சலவைப்பட்டறை பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. கடந்த 21-ந்தேதி அழகே சன் மீது ரெயில் மோதியதில் தூக்கி வீசப் பட்டு, அழுகிய நிலையில் சடலம் கிடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து 15 வேலம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி