மளிகை கடை உரிமையாளர் வீட்டில்
ரூ. 1 லட்சம் திருடிய வாலிபர் கைது
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந் தவர் சுயம்புதுரை (வயது 53). இவர் வீட்டின் கீழ் தளத்தில் மளிகை கடை நடத்தி வருகி றார். கடந்த 27-ந்தேதி வீட்டின் கதவை சாத்தி விட்டு அனைவரும் கடையில் இருந்தனர். பின்னர் மாலை வீட்டிற்கு சென்றபோது பீரோ வில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன், அதில் இருந்த ரூ. 1 லட்சம் திருட்டு போனது
தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளை யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் அலங்காரபேரி பகுதியை சேர்ந்த டேவிட் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட் டது.