திருப்பூரில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் சங்கத்தின் தலைவர். தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த தினசரி காய்கறி சந்தையானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீர்மிகு திருப்பூர் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டி காலி செய்யப்பட்டு தினசரி சந்தையில் கடைகள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடித்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியது ஆனால் தற்போது நான்கு ஆண்டு காலமாகியும் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றும் ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் விரைவில் பணிகளை முடித்து கடைகளை ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த சங்க உறுப்பினர்களுக்கு கடைகளை மாநகராட்சியே வாடகை நிர்ணயம் செய்து கடைகளை ஒதுக்கி தர வேண்டும் என்றம் தற்பொழுது காட்டன் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து முழு வாடகை செலுத்திய வியாபாரிகளின் பட்டியலை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரிடம் கடந்த 26 7 2024 தேதி அன்று சங்கத்தின் சார்பில் கொடுத்துள்ளதாகவும் அதில் கடைகளை தரை தளத்திலேயே வாடகை நிர்ணயம் செய்து சங்க உறுப்பினர்களுக்கு கடைகளை ஒதுக்கி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மார்க்கெட் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.