முறையாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் குற்றம்

70பார்த்தது
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


திருப்பூர் பகுதியை சேர்ந்த பிச்சம்மாள் என்ற பெண்மணி வயிற்றில் கட்டி பிரச்சனை காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் முதல் கட்டமாக அவரது கர்ப்பப்பையில் இருந்த கட்டியை எடுத்து ஆய்வுக்காக அனுப்பிய மருத்துவர்கள் பின்னர் பெரிய கட்டி ஒன்றையும் எடுத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தையல் போடப்பட்டு தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று தையலை பிரித்தபோது முறையாக தையல் போடாததால் மீண்டும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த இடம் ஒட்டாமல் இருந்துள்ளது இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பிச்சமா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக பிச்சம்மாளுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி