திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டை நாமம் அணிந்து மடிப்பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தேர்தல் வாக்குறுதி 313-ன் படி ரூ. 6 ஆயிரத்து 750 குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் பட்டை நாமம் அணிந்தும், மடிப்பிச்சை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம் வட்டக்கிளை தலைவர் மின்னல் கொடி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ரீட்டா, மாவட்ட பொருளாளர் சுசீலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.