தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூரில் நாளை நடக்கிறது
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10. 30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட உ தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்கிறார்கள். வேலைதேடுப வர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான காலியிட விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐ. டி. ஐ. , டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்கள்,
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவில் குறைபாடுகள் கண்ட றியப்பட்டால் அதை சரி செய்து புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ள முடியும். தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறையில் வேலைக்கு சேருவதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்ரத்து செய்யப்படாது. இது முற்றிலும் இலவச மாகும். மேலும் விவரங்களுக்கு 04212999152 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித் துள்ளார்.