திருப்பூர்: கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயர்களை நீக்கவேண்டும் கலெக்டரிடம் மனு

62பார்த்தது
திருப்பூர்: கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயர்களை நீக்கவேண்டும் கலெக்டரிடம் மனு
திராவிடர் தளம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேவூர் செந்தில்குமார், கவிதா, நாராயணமூர்த்தி, சம்புகன், செந்தில்குமார் மற்றும் மாணவர்கள் நேற்று (மே 9) திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: -கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பானது, கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களில் உள்ள சாதி மற்றும் சமூக அடையாளங்களை கட்டாயம் அகற்ற வேண்டும் என கூறியுள்ளது. 

அரசு பள்ளிகள், மாணவர் விடுதிகளில் சாதிப்பெயர்களை நீக்கி அரசுப்பள்ளி, என சாதி சார்பற்ற பெயர்களாக மாற்ற வேண்டும். தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 2025-26-ம் கல்வியாண்டிலேயே சாதிப்பெயர்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

எனவே கல்வி நிறுவனங்களின் சாதிப்பெயர்களை நீக்கி ஐகோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி