திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிண்டா நாயக் (வயது 21) என்பதும், அவரிடம் 8 கிலோ 900 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு போலீசார் பிண்டா நாயக்கை கைது செய்து அவர் விற்பனைக்காக கொண்டு வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.