திருப்பூர்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை

58பார்த்தது
திருப்பூர்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டப் பணிகளுக்கு ஆணைகள் வழங்கும் விழா பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அவினாசி, திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் குடிசை இல்லா மாநிலம் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். 

மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், தொரவலூர் ஊராட்சிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தில் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் சாலை மேம்படுத்துதல் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தார். மேலும் கணக்கம்பாளையம் அரசுப்பள்ளிச் செல்லும் வழியில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மேயர் என்.தினேஷ்குமார், வடக்கு மாநகரப் பொறுப்பாளர் ஈ.தங்கராஜ், வடக்கு ஒன்றியச் செயலாளர் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், வடக்குச் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி