திருப்பூர் கோவில்வழியை சேர்ந்த அருண்பாபு (வயது 24) என்பவர், அவருடைய நண்பர் பவாஷ் என்பவருடன் கடந்த 3-ம் தேதி முருகம்பாளையம் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது முருகம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த் (26), கருப்பசாமி (40), கவுதம் (20) ஆகியோர் முன்விரோதம் காரணமாக அருண்பாபுவை கல்லால் தாக்கி காயப்படுத்தினார்கள். இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள அரவிந்த், கருப்பசாமி, கவுதம் ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 102 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.