திருப்பூர் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 3-ந்தேதி முதல் தொடக்கம்

51பார்த்தது
திருப்பூர் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 3-ந்தேதி முதல் தொடக்கம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: - டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 2025 ஏப்ரல் 24-ந்தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 3-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. பயிற்சியில் மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி